Wednesday, July 17, 2013

திருப்பணியின்போது ஒரு அதிசயம்



2012-ல் கோவில் திருப்பணியயின் போது மூலஸ்தானத்தில் கிரனைட் கல் பதிக்கலாம் என்றெண்ணி ஒரு மூலையில் 1973-ல் பதிக்கப்பட்ட சாதாரன செராமிக் பூக்கல் உடைக்கும்போது ஒரு அதிசயம் காணப்பட்டது. கல் உடைக்கப்பட்ட இடத்தில் ஒரு குழி தென்பட்டது. அதை பெரிது படுத்தாமல்  தொடர்ந்து அடுத்த கல் உடைக்கப்பட்டது. என்ன அதிசயம்! சிறு குழி 1 அடி ஆழமுள்ள அகன்ற குழியாக காணப்பட்டது. மின் விளக்கில் பார்த்தால் அந்தக் குழி மூலஸ்தானம் முழுவதும் பரவலாகக் காணப்பட்டது. கட்டிட கொத்தனாருக்கோ பயம். அதை இடிக்கத் தயங்கினார். ஆனாலும் பகவான் உத்தரவு பெற்று தோண்ட முடிவெடுக்கப்பட்டது. அந்த நிலையில் 40 ஆண்டுகளாக சுமார் 1 டன் எடையுள்ள பீடம் மற்றும் மண் விக்ரகம் பாலம் அமைத்தாற்போல் உள்ள அமைப்பில் அந்தரத்தில் நின்று அருள் பாலித்து வந்துள்ளது அறிய வந்தது. எனினும் தற்போது அந்த 1 அடி ஆழமுள்ள குழி செங்கற்கலால் நிரப்பப்பட்டு கிரனைட் கல் பதிக்கப் பட்டுள்ளது. இந்த நிகழ்வை நேரில் கண்டவர்கள் இன்றும் வியப்புடன் கூறக் கேட்கலாம். எல்லாம் அந்த பகவான் செயல்தான்.     

No comments:

Post a Comment