இந்தக் கோவிலுக்கு ஒரு மகிமை உண்டு. நினைத்தது நிறைவேறும். முழு நம்பிக்கையோடு கண்ணபிரானை வணங்கி மனதளவில் வேண்டிக் கொண்டால் போதும். வருடம் திரும்பும் முன் நினைத்த காரியம் நிறைவேறும் அதிசயம் காணலாம்.
சிலர் தம் வாழ்வில் பல சோதனைகளையும் தடைகளும் சந்தித்திருப்பார்கள். மனிதர்களின் இயல்பு தமக்கு வாழ்க்கையில் சோதனைகள் வரும்போதுதான் தெய்வ சிந்தனை வரும். தம் நிலையை எண்ணி நொந்து கொள்ளும் சமயம் திரு. கணபதி கோன் அவர்க்ளிடம் எடுத்துரைத்தால் போதும். கணபதி கோன் அவர்கள் ஆதி முதல் இந்த கோவிலுக்கு இடைவிடாது பல வகையில் தொண்டு செய்து வருபவர். அருள்வாக்கு சொல்பவர் அல்ல. ஆனாலும் இயல்பாக தன் மனதில் படும்போது சிலருக்கு சில நேர்த்திக்கடன் கூறுவார். அந்த நேர்ச்சைச் செயல் கோவில் தொடர்புடையதாகவே இருக்கும்.
சம்பந்தப்பட்டவர் முழு நம்பிக்கையோடு அவர் சொல்லும் நேர்ச்சையை செய்வதாக ஏற்றுக் கொண்டு வேண்டிக்கொண்டால் போதும். வருடம் திரும்புவதற்குள் எண்ணிய காரியம் நிறைவேறும் அதிசயத்தைக் காணலாம். இவ்வாரு தன்னிச்சையாக அருள்வாக்கு கூறுபவர் எதையும் தனக்கென எதிபார்க்க மாட்டார். எதுவானாலும் கோவிலுக்கு செய்யச் சொல்வார். அந்த வகையில் கோவிலுக்கு பொருள்களாக வேண்டிக் கொள்பவர்களும் உண்டு. பரட்டாசி திருவிழாவின் போது சில செலவுகளை ஏற்பதும் உண்டு.
சிலருடைய நேர்ச்சைகள்:
1. அன்னதானம் வழங்குதல்
2. சப்பரம் புஷ்ப அலங்காரம்
2. சப்பரம் புஷ்ப அலங்காரம்
3. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல்
4. ரேடியோ மைக்செட்
5. தேங்காய், வாழைப் பழங்கள் உபயம்
6. விழாவின்போது சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு
7.சிறப்பு நிகழ்ச்சிகளுக்காண மேடை அமைப்பு
7.சிறப்பு நிகழ்ச்சிகளுக்காண மேடை அமைப்பு
8. பந்தல் உபயம்
9. சுவாமி ஊர்வலத்தின்போது சீர்பாதம் தாங்கிகளுக்கு கோடி சாத்துதல்
10. சுவாமி மற்றும் கோபுரத்திற்கு பெயிண்ட் உபயம்
இவ்வாறு விரும்பி செய்யும் நேர்த்திக்கடன் உபயம் நாளுக்கு நாள் வளர்ந்து கோண்டே வருகிறது. இதை வாசிக்கும் பக்தர்கள் தங்கள் நலன் கருதி திரு. கணபதி அவர்களை சந்தித்து வாக்கு பெறலாம். சிலருக்கு நினைத்த காரியம் நடக்காதென்றும் கூறுவார்.
இவ்வாறு விரும்பி செய்யும் நேர்த்திக்கடன் உபயம் நாளுக்கு நாள் வளர்ந்து கோண்டே வருகிறது. இதை வாசிக்கும் பக்தர்கள் தங்கள் நலன் கருதி திரு. கணபதி அவர்களை சந்தித்து வாக்கு பெறலாம். சிலருக்கு நினைத்த காரியம் நடக்காதென்றும் கூறுவார்.