Wednesday, July 17, 2013

கோவிலில் மூலவர் மற்றும் உற்சவர்

:அருள்மிகு கிருஷ்ணர்:
 
                                      
இதுவே இக்கோவிலில் உள்ள கோபாலகிருஷ்ணனின் திருக்கோலம். இச்சிலை ம்ண்ணால் செய்யப்பட்டது. பச்சை மண்ணில் சில மருந்துகள் சேர்த்து செய்யப்பட்டதால் நூறு வருடங்கள் ஆகியும் உருவம் சிதையாமல் உள்ளது.  இச்சிலை 1914-ம் ஆண்டு ஆவல்சூரன்பட்டி தெய்வத்திரு ராமசாமி  செட்டியார் மற்றும் வகையறாவால் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவ்வப்போது வண்ணம் ஏற்றி வருவதால் இன்னும் பிரகாசமான அருள் பார்வை மாறாமல் உள்ளது. இப்போது உள்ள தோற்றம் இங்கு காணலாம்.

இக்கோயிலில் மூலவர் மற்றும் உற்சவர் என தனித்தனியாக இல்லை. மூலவரும் உற்சவரும் ஒன்றுதான். வருடம் ஒருமுறை ஊர் முழுவதும் உற்சவ வலம் வந்து மீண்டும் இருப்பிடத்தில் அமர்ந்து அருள் பாலித்து வருவதை அனைவரும் அறிவார்கள்.

No comments:

Post a Comment